இலஞ்சம் பெற்ற அதிபருக்கு ஆதரவாக பெற்றோர் ஆர்ப்பாட்டம்

RSM
இலஞ்சம் பெற்ற அதிபருக்கு ஆதரவாக பெற்றோர் ஆர்ப்பாட்டம்-Parents Protest to Support-Horowpothana Principal

பேண்ட் சீருடை கொள்வனவிற்கே பணம் அறவிட்டதாக தெரிவிப்பு

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டு தொடர்பில் கைதான ஹொரவபொத்தானை, ருவன்வெலி மத்திய மகா வித்தியாலய அதிபருக்கு ஆதரவாக அப்பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த ஐனவரி மாதம் 31ஆம் திகதி அப்பாடசாலையின் அதிபராக கடமையாற்றிய எம்.டி.எம். பண்டார, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் 5,000 ரூபாய் பணத்தை லஞ்சமாக பெற்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டார்.

இலஞ்சம் பெற்ற அதிபருக்கு ஆதரவாக பெற்றோர் ஆர்ப்பாட்டம்-Parents Protest to Support-Horowpothana Principal

அவர் பணத்தை இலஞ்சமாக பெறவில்லை எனவும் பாடசாலையின் அபிவிருத்தி குறித்தே  அப்பணத்தை பெற்றுக் கொண்டதாகவும்  தெரிவித்து பெற்றோர்கள் இன்று (07) பாடசாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பதாதைகளை ஏந்திய வண்ணம் கோஷங்களை எழுப்பி தனிப்பட்ட கோபத்துக்காக வேண்டி இவருக்கு பணம் கொடுத்து அவரை கைது செய்ததாகவும் அதற்கு தங்களுடைய எதிர்ப்பினை தெரிவிப்பதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

இலஞ்சம் பெற்ற அதிபருக்கு ஆதரவாக பெற்றோர் ஆர்ப்பாட்டம்-Parents Protest to Support-Horowpothana Principal

அத்துடன் பாடசாலையின் இரண்டு பேண்ட் வாத்திய குழுக்கள் இருப்பதாகவும் அவர்களுக்கான ஆடைகளை பெற்றுக் கொள்வதற்கே இப்பணம் சேர்த்துக்கொள்ளப்பட இருந்ததாக பெற்றோர்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பில் குறித்த பொருட்களை முன்னால் வைத்த வண்ணம் பதாதைகளை ஏந்தியவாறு சுமார் 60 பெற்றோர்கள் இவ்வார்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

(ரொட்டவெவ குறூப் நிருபர் அப்துல்சலாம் யாசீம்)

Thu, 02/07/2019 - 10:26


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை