கர்நாடகம் செல்லும் மன்னார் மாவட்ட வீரர்கள் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீனுடன் சந்திப்பு

இந்தியா கர்நாடகாவில் இன்று ஆரம்பமாகவுள்ள மூன்றாவது ஆசியன் ரோல்பந்து போட்டியில் பங்கேற்கும் இலங்கைக் குழுவில் இடம்பெற்றுள்ள மன்னார்மாவட்டவீர, வீராங்கனைகள் கடந்த (20) காலை வடமாகாண சபை முன்னாள் உறுப்பினரும்,கைத்தொழில், வர்த்தகம், நீண்டாகால இடம்பெயர்ந்தோருக்கான மீள்குடியேற்றம் மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சருமான ரிஷாட்பதியுதீனின் பிரத்தியேகச் செயலாளருமான ரிப்கான் பதியுதீனை சந்தித்தனர்.

18 பேர் அடங்கிய இலங்கைக் குழுவில் மன்னாரில் முன்னணிப் பாடசாலைகளில் கல்வி பயிலும் 4 வீரர்களும், 3 வீராங்கனைகளும் இடம்பெற்றுள்ளனர்.கவீந்தன், ஹரிஷ், கிஷோதமன், நிரோஜ், ஏதிவ்யா, ஜெதிவ்யா, மிலானி ஆகியோரே இந்தக் குழுவில் மன்னார் மாவட்டத்திலிருந்து கலந்துகொள்கின்றனர்.

”விளையாட்டுத்துறையில் இலங்கையின் புகழை பெற்றுக்கொடுத்து சாதனைகளை நிலைநாட்ட மன்னார் மாவட்ட வீரர்கள் தமது திறமைகளையும் ஆற்றல்களையும் இந்தப்போட்டியில்வெளிக்காட்டவேண்டுமெனவும், எதிர்காலவெற்றியின்மூலமேவிளையாட்டுத்துறையில் சர்வதேசரீதியில்இலங்கைவீரர்கள்இடம்பெறுவதற்குஉத்வேகமளிக்குமெனவும்ரிப்கான்பதியுதீன் இந்த சந்தர்பத்தில் தெரிவித்தார்.

மன்னார் மாவட்ட விளையாட்டுத்துறையை மேம்படுத்துவதில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பாரிய பங்களிப்பை நல்கி வருகின்றமைக்கும் யுத்தத்தின் காரணமாக கைவிடப்பட்டிருந்த விளையாட்டு மைதானங்களையும், பாடசாலை மைதானங்களையும் புனரமைப்பதற்கும் பெரும் பாலான பாடசாலைகளில் புதிய மைதானங்களை அமைத்துக் கொடுப்பதற்கும் அவர் ஆற்றி வருகின்ற பங்களிப்புக்கும் மன்னார் மாவட்ட மக்கள் சார்பில் தமது நன்றிகளை தெரிவிப்பதாக விளையாட்டு வீரர்கள் தெரிவித்தனர்.

மன்னார் மாவட்ட வீரர்கள் தேசிய ரீதியில் மிளிர்ந்து சர்வதேச ரீதியில் போட்டியில் பங்கேற்பதற்கு பல்வேறு உதவிகளையும், பயிற்சிக்கான விளையாட்டு உபகரணங்களையும் தொடர்ந்து வழங்கிவரும் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கும், மாவட்டத்தின் விளையாட்டுத்துறையை மேம்படுத்துவதற்காக விளையாட்டு வீரர்களை அடிக்கடி சந்தித்து உதவியளித்து உத்வேகப்படுத்தும் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீனுக்கும் அவர்கள் தங்கள் நன்றிகளை இந்த சந்திப்பின்போது தெரிவித்தன. அதுமட்டுமன்றி அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் ரிப்கான் பதியுதீன் மாகாண சபை உறுப்பினராக இருந்தபோது தமது நிதியொதுக்கீட்டின் மூலம் மன்னார் மாவட்டத்தின் விளையாட்டுத்துறையை மேம்படுத்துவதற்கு வழங்கிய உதவிகளையும் அவர்கள் நினைவு கூர்ந்தனர்.

Fri, 02/22/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை