மாகாண சபை உறுப்பினர் கிரிஷாந்த புஷ்பகுமார பிணையில் விடுதலை

16 வயது நிரம்பிய சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் இன்று காலை கைது செய்யப்பட்ட மாகாண சபை உறுப்பினர் கிரிஷாந்த புஷ்பகுமார அக்மீமன நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டதையடுத்து பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

'ரத்தரங்' என அறியப்படும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தென் மாகாண சபை உறுப்பினரான இவர், 16 வயது பாடசாலை சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டிற்காக அவர் அக்மீமண பொலிஸ் நிலையத்தில் ஆஜரானதையடுத்து கைது செய்யப்பட்டார்.

இவர் அக்மீமன நீதிமன்ற நீதிபதி ஹர்ஸன ககுன்வெலவினால் ரூபா 25,000 பெறுமதியான ரொக்கம் மற்றும் ரூபா 500,000 பெறுமதியான இரு சரீரப் பிணையிலும் விடுவிக்கப்பட்டுள்ளார்.  

Fri, 03/01/2019 - 15:48


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை