தேசிய அரசாங்கமொன்றை அமைத்து அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பான யோசனையொன்று சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
குறித்த யோசனை, இன்று (01) முற்பகல் சபை முதல்வரும், பொது நிறுவனங்கள், கண்டி பாரம்பரியம் மற்றும் கண்டி அபிவிருத்தி அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்லவினால் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டதாக, அவரது அமைச்சு அறிவித்துள்ளது.
தேசிய அரசாங்கம் அமைக்கப்படும் நிலையில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களின் எண்ணிக்கையை 48 இற்கு அதிகமாகாமலும், அமைச்சரவை அந்தஸ்தற்ற மற்றும் பிரதி அமைச்சர்களின் எண்ணிக்கை 45 இற்கும் அதிகமாகாமலும் இருப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக, குறித்த யோசனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Fri, 02/01/2019 - 16:26
from tkn