நாட்டின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறு காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் கிழக்கு, ஊவா, வடமத்திய மாகாணங்களிலும் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறு காணப்படுகின்றது. இதேவேளை, சப்ரகமுவ, மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் 75மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகக்கூடிய சாத்தியக்கூறு காணப்படுகின்றது.
மேலும், வட மாகாணத்தின் பல பகுதிகளில் 2மணிக்கு பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனவே இடி, மின்னல் தாக்கத்திலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ளுமாறு பொதுமக்களிடம் வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
from tkn