திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட தங்கவேலாயுதபுரம் உடும்பன்குளம் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட 126 அப்பாவித் தமிழர்களின் 33 ஆவது நினைவேந்தல் நிகழ்வு நேற்று (19) அனுஷ்டிக்கப் பட்டது.இதில் உயிரிழந்தோருக்கு ஆத்மசாந்தி வேண்டி நடத்தப்பட்ட சமய வழிபாடுகளில், உறவினர்கள், குடும்பத்த வர்கள் கலந்து கொண்டனர் .
அம்பாறை மாவட்ட காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கம் ஏற்பாடு செய்த இந்நிகழ்வு நேற்று தங்கவேலாயுதபுரம் மலையடிப் பிள்ளையார் கோவிலில் இடம்பெற்றது.
ஆலயத்தில் தனியொளி சிவம் குருக்கள் பூஜைகள் செய்ததுடன் படுகொலை செய்யப் பட்டவர்களின் நினைவாக தீபங்கள் ஏற்றப் பட்டு,மலைமேல் அமைந்துள்ள முருகன் ஆலயத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு
பிரார்த்தனைகளும் நடத்தப்பட்டன. உடும்பன் குளம் அப்பாவி தமிழர்கள் 1986 பெப்ரவரி 19ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.
(திருக்கோவில் தினகரன் நிருபர்-)
from tkn