பொலிஸ் பரிசோதகர் கபில நிசாந்த விளக்கமறியலில்

காலி - ரத்கமயில் வர்த்தகர்கள் இருவர் காணாமல் போன சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட தென் மாகாண விஷேட விசாரணை பிரிவின் பொலிஸ் பரிசோதகர் கபில நிசாந்தவை இம் மாதம் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் தென் மாகாண விஷேட விசாரணை பிரிவின் பொலிஸ் பரிசோதகர் கபில நிசாந்தவை குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் நேற்று (18) கைது செய்திருந்தனர்.

ரத்கம - உதாகம பிரதேசத்தை சேர்ந்த 31 வயதுடைய ரசேன் சிந்தக மற்றும் 33 வயதுடைய மஞ்சுள அசேல ஆகியோர் கடந்தஜனவரி மாதம்23 ஆம் திகதி வேன் ஒன்றில் வந்த குழு ஒன்றினால் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

பொலிஸ் உடையில் வந்த சிலர் அவர்களை கடத்திச் சென்றதாக அவர்களின் உறவினர்கள் தெரிவித்திருந்தனர்.

அதனடிப்படையிலேயே சம்பவம் தொடர்பில் தென் மாகாண விஷேட விசாரணை பிரிவின் பொலிஸ் பரிசோதகர் கபில நிசாந்த கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Tue, 02/19/2019 - 12:32


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை