குழந்தையுடன் அபாயகரமாக விளையாடிய தம்பதி கைது

மலேசியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட ரஷ்ய தம்பதியினர் 4 மாதக் குழந்தையை அபாயகரமான முறையில் வைத்து விளையாட்டுக் காட்டியதால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ரஷ்யாவைச் சேர்ந்த 28 வயதாக தம்பதியினர் நேற்று முன்தினம் மலேசிய தலைநகர் கோலாலம்பூர் வந்திருந்தனர். அங்கு அவர்கள் தங்களின் 4 மாதக் குழந்தையை வைத்து அபாயகரமான முறையில் வித்தை காட்டினர்.

இதன்போது குழந்தையின் கால்களை பிடித்து சுழற்றியது மற்றும் மேலே தூக்கி எறிந்தது போன்ற அபாயகரமான செயலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் கோலாலம்புூர் பொலிசார் அந்தத் தம்பதியைக் கைது செய்தனர். உலகம் சுற்றும் தங்களுக்கு பணத் தேவைக்காக இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டதாக ரஷ்ய தம்பதியினர் தெரிவித்துள்ளனர்.

Wed, 02/06/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை