பாலமுனை மஹாசினுல் உலூம் அரபுக் கல்லூரி மாணவர்களுக்கிடையே கிரிக்கெட் போட்டி

71 வது தேசிய தினத்தை முன்னிட்டு பாலமுனை வை.எம்.எம்.ஏ.கிளையினால் பாலமுனை மஹாசினுல் உலூம் அரபுக் கல்லூரி மாணவர்களுக்கிடையே நடைபெற்ற கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் மஹாசினி விளையாட்டுக் கழக அணியினர் 2019 ஆண்டின் வை.எம்.எம்.ஏ தேசிய தின வெற்றிக்கிண்ணத்தை தனதாக்கிக் கொண்டனர். அணிக்கு 9 பேர் 6 ஒவர் மட்டுப்படுத்தப்பட்ட மஹாசினுல் உலூம் அரபுக் கல்லூரியை பிரதிநிதித்துவப்படுத்தும் மஹாசினி அணி. ஈமானியா அணி. ஹஸனியா அணி ஆகிய 3 விளையாட்டுக் கழக அணியினர்கள் பங்கு கொண்ட இச்சுற்றுப்போட்டி ஒருநாள் போட்டியாக பாலமுனை பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

இச்சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டியானது மஹாசினி அணிக்கும் ஈமாணியா அணிக்குமிடையில் நடைபெற்றது. இறுதிப் போட்டியில் நாணயச் சுழர்ச்சியில் வெற்றிபெற்ற மஹாசினி விளையாட்டு கழக அணயினர் முதலில் துடுப்பெடுத்தாட ஈமாணியா அணியினரை கேட்டுக்கொண்டதற்கமைவாக 6 ஓவர் நிறைவில் 5 விக்கட்டுகளையும் இழந்து 48 ஓட்டங்களை இமானியா அணியினர் பெற்றுக் கொண்டனர். பதிலுக்கு வெற்றி பெறதுடுப்பெடுத்தாடிய மஹாசினி அணியினர் 6 ஓவர் நிறைவில் 4 விக்கட்டுக்களை இழந்து 49 ஓட்டங்களை பெற்று 2 விக்கட்டுக்களினால் இச்சுற்றுப்போட்டியில் வெற்றிபெற்று சம்பியனாகினர். இதில் இரண்டாமிடத்தை இமானியா அணியினர் தனதாக்கிக் கொண்டனர்.

இச்சுற்றுப் போட்டியில் வெற்றிபெற்று சம்பியனான மஹாசினி அணியின் தலைவர் ஏ.எல்.சாஜித் ஹீஸைனிடம் வெற்றிக்கிண்ணம் வழங்கி வைக்கப்பட்டதுடன். இரண்டாம் இடத்தைப்பெற்ற ஈமானியா அணியின் தலைவர் ரி.நிஸ்தாரிடம் அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டன.

பாலமுனை வை.எம்.எம்.ஏ கிளையின் உப தலைவர் எம்.எப்.பர்சாத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் யு. பிறஸ் நிறுவனத்தின் கிழக்கு மாகாண பணிப்பாளர் ஏ.எம்.அனிஸ் பிரதம அதிதியாகவும். அட்டாளைச்சேனை பிரதேச சபையின் உறுப்பினர்களான எஸ்.எம்.எம்.ஹனிபா. ஏ.பி.பதுறுதின். எச்.எம்.சிறாஜ் . நுகர்வோர் அதிகார சபையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சட்டத்தரணி எம்.ஏ.அன்சில். பாலமுனை ஜும்ஆப்பள்ளிவாசல் தலைவர் எம்.ஏ.அன்சார் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.

(பாலமுனை கிழக்கு தினகரன் நிருபர்)

Sat, 02/16/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை