போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு, 2 மாதங்களுக்குள் மரண தண்டனை நிறைவேற்றப்படும் என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
சட்ட ஒழுங்கு அமைச்சர் எனும் வகையில் பாராளுமன்றத்தில் விசேட உரை நிகழ்த்திய ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.
இதன்போது தெரிவித்த அவர், எந்த எதிர்ப்பு வந்தாலும் குறித்த நடவடிக்கையை மேற்கொள்வேன் என சுட்டிக்காட்டியதோடு, போதை கடத்தல் காரர்களுக்கு சார்பாக செயற்பட வேண்டாம் என, மனித உரிமை அமைப்புகளிடம் கோரிக்கை விடுப்பதாக தெரிவித்தார்.
(பாராளுமன்றத்திலிருந்து மகேஸ்வரன் பிரசாத்)
Wed, 02/06/2019 - 17:31
from tkn