பதுளை தினகரன் விசேட நிருபர்
காட்டு யானைகளினால் ஏற்படும் பாதிப்புக்களை நிவர்த்தி செய்யும் பொருட்டு, யானை வெடிகளுக்கு மாறாக “மிளகாய்த் தூளை” பாவிக்கும் முறைமை வெற்றியளித்து வருவதாக பதுளை மாவட்ட விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
பதுளை மாவட்டத்தின் மகியங்கனை தேர்தல் தொகுதியின் விவசாயிகள் மற்றும் மகாவலி “சி” பிரிவு விவசாயிகள் காட்டு யானைகளினால் ஏற்பட்டு வரும் பல்வேறு பாதிப்புக்களை நிவர்த்தி செய்யும் பொருட்டு,“மிளகாய் தூள்” பாவிக்கும் முறைமையை, பரீட்சார்த்த முறையில் மேற்கொண்டு வெற்றியைக் கண்டுள்ளனர். “மிளகாய்த் தூள்” பாவனையை பெரியளவில் மேற்கொள்ள முடியாவிட்டாலும் கூட வீட்டுத் தோட்டப் பயிர்ச்செய்கை, தென்னை, வாழைப்பயிர்ச்செய்கை, வீடுகள் மற்றும் சேமிப்பு நெல், குரக்கன், சோளம் ஆகியவற்றின் மூடைகள் ஆகியவற்றை காட்டு யானைகளினால் பாதுகாப்பது உள்ளிட்ட, மனித உயிர்களை காட்டு யானைகளினால் பாதுகாப்பது போன்ற செயல்பாடுகளை மேற்கொள்ள முடியுமென்றும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
“மிளகாய்த் தூள்” பாவனையை பெரியளவில் மேற்கொள்ள பொருளாதார நிலை பெரும் தடையாக இருப்பதாகவும் விவசாயிகள் மேலும் கூறினர்.
from tkn