பீடி இலை விவகாரம்; இருவருக்கு விளக்கமறியல்

பீடி இலை கொள்கலன் ஒன்றை சுங்கவரி செலுத்தாது சட்டவிரோதமாக விடுவித்தமை தொடர்பாக சுங்க அதிகாரிகளினால் கைதுசெய்யப்பட்ட இரு சந்தேக நபர்களையும் மார்ச் மாதம் 5 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

40 மில்லியன் ரூபா சுங்கவரி செலுத்தாது குறித்த கொள்கலனை சுங்கத்தில் இருந்து விடுவிக்க முயன்ற காரணத்தினால் குறித்த இருவரும் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.

இவர்களுக்கு முதலில் பிணை வழங்கப்பட்டாலும், மீண்டும் பிணை உத்தரவு ரத்துச் செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது. 

Wed, 02/27/2019 - 10:08


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை