பரிஸில் பாரிய தீ விபத்து: எழுவர் உயிரிழப்பு

 
பிரான்ஸ் தலைநகர் பரிஸில் 8 மாடிகளைக் கொண்ட கட்டடமொன்றில் திடீரென்று தீ பரவியதில் 7 பேர் உயிரிழந்ததுடன், சுமார் 30 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 
 
மேலும், காயமடைந்தவர்களில் 3 தீயணைப்புப் படை வீரர்களும் அடங்குவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 
 
தென்மேற்கு பரிஸிலுள்ள கட்டடமொன்றிலேயே நேற்றிரவு தீ பரவியுள்ளது. மேற்படி கட்டடத்தின் 7ஆம், 8ஆம் மாடிகளில் தீ பரவிய நிலையில், அம்மாடிக் கட்டடத்தில் வசித்துவந்த சில குடியிருப்பாளர்கள் தீயிலிருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ளும் வகையில் கூரை மீது ஏறியுள்ளனர். 
 
னினும்,  இந்தத் தீ விபத்துக்கான காரணம் உடனடியாகத் தெரியவரவில்லையெனவும் சுமார் 200 தீயணைப்புப் படைவீரர்கள் மிகுந்த சிரமத்துக்கு மத்தியில் தீயை அணைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும்ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 
 
Tue, 02/05/2019 - 11:57


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை