இஸ்ரேலிய துருப்புகளால் பலஸ்தீனர் சுட்டுக்கொலை

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் கடந்த திங்கட்கிழமை இஸ்ரேல் துருப்புகளால் ஒரு பலஸ்தீனர் சுட்டுக்கொல்லப்பட்டிருப்பதோடு மற்றும் ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் குண்டு தாக்குதல் ஒன்றை நடத்த முற்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது.

பலஸ்தீன நகரான ஜெனினுக்கு அருகில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் இஸ்ரேல் இராணுவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை.

இருவர் அனுமதிக்கப்பட்டதாக கூறியிருக்கும் ஜெனின் மருத்துவமனை, அதில் 19 வயதுடையவர் துப்பாக்கிக் காயம் காரணமாக உயிரிழந்ததாகவும் மற்றையவரின் கீழ் பின்பாகத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு தற்போது ஸ்திரமான நிலையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் இராணுவம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், இரு தாக்குதல்தாரிகள் வெடிக்கும் பொருள் ஒன்றை வீசியதை அடுத்து துருப்புக்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக குறிப்பிட்டுள்ளது.

எனினும் ஜலமாஹ் சோதனைச்சாவடிக்கு அருகால் மோட்டார் சைக்கில் ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்த இரு இளைஞர்கள் மீதே இஸ்ரேல் இராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக செம்பிறைச் சங்க பேச்சாளர் மஹ்மூத் சாதி குறிப்பிட்டுள்ளார்.

Wed, 02/06/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை