அவுஸ்திரேலியாவின் குவீன்ஸ்லாந்து மாநிலம் பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.
அந்த வட்டாரத்தில் கனத்த மழை தீவிரமடையக்கூடுமென எதிர்பார்க்கப்படுவதால், வெள்ள நிலைமை மேலும் கடுமையாகலாம் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
அத்தகைய வேளையில் வீதிகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி குடியிருப்பாளர்களை அவர்கள் கேட்டுக்கொண்டனர். வெள்ள நிலவரம் தீவிரமடைந்தால், மேடான பகுதிகளுக்குச் செல்லுமாறு பொதுமக்களுக்கு ஆலோசனை கூறப்பட்டுள்ளது.
இதனிடையே தெற்கு அவுஸ்திரேலியாவில் கடும் வறட்சி நீடித்து வருகிறது. தெற்கு தீவான டாஸ்மேனியாவில் காட்டுத் தீ பரவி இருப்பதோடு கடந்த ஜனவரி மாதம் அவுஸ்திரேலிய வரலாற்றி மிக சூடான மாதம் என பதிவாகி இருந்தது.
Mon, 02/04/2019 - 12:48
from tkn