மட்டக்களப்பில் கிழக்கு மாகாண விவசாய விருதுவிழா

'கமநலத்தின் பெருமை' கிழக்கு மாகாணத்திற்கான கமநல விருதுவிழா நேற்று (25) மாலை மட்டக்களப்பு மாநகர சபை மண்பத்தில் கமநல சேவைகள் அபிவிருத்தி திணைக்கள ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.ரி.வீரசேகர தலைமையில் நடைபெற்றது.

விவசாய நீர்ப்பாசன கிராமிய பொருளாதார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 104 விவசாயிகள் விருதுகளைப் பெற்றுக்கொண்டனர்.சிறந்த வீட்டுத் தோட்ட செய்கையாளர், சிறந்த விதை நெல் பண்ணையாளர், சிறந்த சேதன பசளை உற்பத்தியாளர், சிறந்த பெண்கள் கமநல அமைப்பு உட்பட பல்வேறு போடடிகளிலும் வெற்றி பெற்றவர்கள் விருதுகளைப் பெற்றுக்கொண்டனர்.

இராஜாங்க அமைச்சர் அலி சாஹிர் மௌலானா, பாராளுமன்ற உறுப்பினர்களான சி.யோகேஸ்வரன், ஜி.சிறீநேசன், மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் உட்பட விவசாய திணைக்கள உயர் அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

(ரீ.எல்.ஜவ்பர்கான் - மட்டக்களப்பு குறூப் நிருபர்)

Tue, 02/26/2019 - 12:50


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை