இன்றுடன் (05) ஓய்வு பெற இருந்த விசேட அதிரடிப்படையின் (STF) தலைமை அதிகாரி, சிரேஷ்ட பொலிஸ் மா அதிபரி (DIG) எம்.ஆர். லத்தீபின் சேவைக் காலம் ஒரு வருடத்தால் நீடிக்கப்பட்டுள்னது.
இன்று (05) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் முன்வைக்கப்பட்ட குறித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
தனது 41 வருட பொலிஸ் சேவையிலிருந்து இன்றுடன் ஓய்வு பெற இருந்த அவருக்கு, சேவை அவசியம் கருதி ஒரு வருட கால சேவை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது.
சிரேஷ்ட பொலிஸ் மா அதிபரான அவர், கடந்த 2016 ஓகஸ்ட் 18 ஆம் திகதி, பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கட்டளையிடும் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
எம்.ஆர். லத்தீபின் தலைமையின் கீழ் கடந்த ஆறு மாதங்களில் 798 கிலோகிராம் ஹெரோயின் போதைப் பொருள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அண்மையில் வெளிநாட்டவர்களுடன் இலங்கையில் மீட்கப்பட்ட அதிகூடிய ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் கொள்ளுப்பிட்டியில் மீட்கப்பட்ட ஹெரோயின் போதைப் பொருளும் அவற்றில் உள்ளடங்குகின்றன.
அத்துடன் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் பேருவளையில் கைப்பற்றப்பட்ட 231 கிலோகிராம் ஹெரோயின் போதைப் பொருளும் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் எம்.ஆர். லத்தீபின் தலைமையின் கீழ் கைப்பற்றப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
from tkn