விடுவிக்கப்பட்ட காணிகள் ஆளுநரால் பொதுமக்களிடம் கையளிப்பு

RSM
விடுவிக்கப்பட்ட காணிகள் ஆளுநரால் பொதுமக்களிடம் கையளிப்பு-Northern Province Governor Handed Over Land Released by Army

கிளிநொச்சி மாவட்டத்தின் கரச்சி மற்றும் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுகளில் பாதுகாப்பு படைகளிடமிருந்து விடுவிக்கப்பட்ட காணிகளை பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டது.

விடுவிக்கப்பட்ட காணிகள் ஆளுநரால் பொதுமக்களிடம் கையளிப்பு-Northern Province Governor Handed Over Land Released by Army

இந்நிகழ்வு வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தலைமையில் இன்று (07) முற்பகல் கிளிநொச்சி மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

பாதுகாப்பு படைகளின் கட்டுப்பாட்டிலிருந்த 39.95 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டதுடன் அவற்றில் பொதுமக்களுக்கு சொந்தமான 21.24 ஏக்கர் காணிகளுக்கான உரிமைப் பத்திரங்கள் வட மாகாண ஆளுநரால் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டது.

Thu, 02/07/2019 - 18:21


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை