சிரியாவில் ஐ.எஸ் குழு தனது கடைசி நிலத்திலிருந்து ஓட்டம்

கிழக்கு சிரியாவில் அமெரிக்கா ஆதரவுப் படை இஸ்லாமிய அரசு குழுவின் கடைசி நிலத்தை நோக்கி முன்னேறியதை அடுத்து அந்தக் குழு உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் குடுபத்தினர் தப்பியோட ஆரம்பித்துள்ளனர்.

50 சதுர கிலோமீற்றராக வேகமாக சுருங்கிய ஐ.எஸ் கட்டுப்பாடு பாகுதியில் இருந்து ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் மோசமான காயங்கள் மற்றும் உணவு தீர்ந்த நிலையில் வெளியேறி வருவதாக அமெரிக்க இராணுவம் குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்க ஆதரவு குர்திஷ் படையினர் சுற்றிவளைத்திருக்கும் பகுஸ் கிராமத்தை இவர்கள் அடைந்துள்ளனர். இந்த கிராமத்தை வந்தடைந்திருக்கும் பலரும் கயமடைந்த நிலையில் உள்ளனர்.

ஐ.எஸ் குழு உறுப்பினர்களின் மனைவிமார், குழந்தைகள் அந்தப் பாலைவன பகுதியில் கடந்த வாரம் தொடக்கம் காணக்கிடைப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

Fri, 02/08/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை