சுங்கத் திணைக்களத் தொழிற்சங்கத்தின் போராட்டம் முடிவு

சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மீண்டும் கடமையில் அமர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, சுங்கத் திணைக்களத் தொழிற்சங்கத்தினர் தமது போராட்டத்தைக் கைவிட்டுள்ளனர்.

கடந்த ஜனவரி இறுதியில் கடமையிலிருந்து நீக்கப்பட்ட சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மீண்டும் கடமையில் நேற்று (05) அமர்த்தப்பட்டார். இதனைத் தொடர்ந்து சுங்கத் திணைக்கள தொழிற்சங்கத்தினர் தமது போராட்டத்தைக் கைவிட்டதாக சுங்கத் திணைக்கள தொழிற்சங்கத்தின்  இணைப்பாளர் வருண சமிர தெரிவித்துள்ளார்.

சுங்கத் திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரியொருவர் நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, சுங்கத் திணைக்களத் தொழிற்சங்கத்தினர் சட்டப்படி வேலை நிறுத்த போராட்டத்தை நேற்று முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Wed, 02/06/2019 - 10:06


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை