நாளை முதல் ஊவா மாகாணத்தில் இடியுடன் கூடிய மழை

நாளை முதல் (25) அடுத்த சில நாட்களுக்கு நாட்டின் தென் அரைப்பாகத்தில் குறிப்பாக ஊவா மாகாணத்தில் மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் உயர்வாகக் காணப்படுதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

Sun, 02/24/2019 - 16:31


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை