உலக கிண்ணங்களை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு கட்டார் அழைப்பு

2022-ல் நடைபெற இருக்கும் உலக கிண்ண கால்பந்து தொடரை காண வருமாறு உலக கிண்ணத்தை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு கட்டார் அழைப்பு விடுத்துள்ளது.

2022-ல் கட்டார் கால்பந்து உலகக் கிண்ண தொடரை நடத்துகிறது. இந்த உலக கிண்ணத்துக்கான பிரதம நிறைவேற்று அதிகாரி நாஸர் காட்டர் உள்ளார். இவர் கிரிக்கெட்டில் 1983-ம் ஆண்டும், 2011-ம் ஆண்டும் உலக கிண்ணத்தை வென்ற இந்திய அணிக்கு கால்பந்து தொடரை காண வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்து நாஸர் காட்டர் கூறுகையில் ‘‘கட்டாரில் நடக்க இருக்கும் உலகக் கிண்ண தொடர் நாம் அனைவரும் கொண்டாடதக்கதாக இருக்கும் என சொல்லலாம். உங்களை கட்டாரில் வரவேற்கும் நாளை எதிர்பார்த்து கொண்டிருக்கிறோம்.

இந்தியாவில் கிரிக்கெட் எவ்வளவு பெரிய விளையாட்டு என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை. ஆகவே, 1983-ம் ஆண்டு கிண்ணத்தை வென்ற இந்திய அணியில் உள்ள வீரர்களும், 2011-ம் ஆண்டு உலகக்கோப்பையில் வென்ற அணியில் உள்ள வீரர்களும் உள்ளனர். கட்டார் வந்து உலகக் கிண்ண போட்டிகளை காண அவர்களுக்கு சிறப்பான அழைப்பு விடுக்கிறேன்’’ என்றார்.

Wed, 02/20/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை