சட்டவிரோதமான முறையில் பிடிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்த கடல் சங்குகளை வைத்திருந்த சந்தேக நபர் ஒருவரை ஹம்பாந்தோட்டை பன்வெவ பிரதேசத்திலிருந்து ஹம்பாந்தோட்டை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
கடற்படையினருக்கு கிடைத்த தகவலையடுத்து விசேட அதிரடிப்படையினர் வனஐீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுடன் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போதே, அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவரிடமிருந்து தடை செய்யப்பட்ட நான்கு வகைச் சங்குகள் காணப்பட்டுள்ளதோடு, இவை ஐம்பதாயிரம் ரூபாவிற்கு மேல் பெறுமதியானவை என மதிப்பிடப்பட்டுள்ளது.மேற்படி சங்குகளை விற்பனை செய்வதற்காக வைத்திருந்தபோதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹம்பாந்தோட்டை குறூப் நிருபர்
Fri, 02/15/2019 - 10:14
from tkn