மல்வத்தை, அஸ்கிரிய பீடாதிபதிகளிடம் எதிர்க்கட்சித் தலைவர் பேச்சு

கண்டிக்கு விஜயம் செய்த எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்தராஜபக்ஷ மல்வத்தை மற்றும் அஸ்கிரிய பீடாதிபதிகளை சந்தித்து, ஆசி பெற்றுக்கொண்டார். இதன் பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர்: அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் தேசிய அரசாங்கத்தை உருவாக்க அரசாங்கம் முயற்சிக்கிறது.

அமைச்சுக்களின் எண்ணிகையை அதிகரிக்க வேண்டுமானால் அரசியலமைப்பில் திருத்தம் கொண்டுவருவதே சிறந்தது.

அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் அரசின் நோக்கம் ஒருபோதும் வெற்றியளிக்காது. ஜனாதிபதித் தேர்தலில் யாரை நிறுத்துவதென்ற தீர்மானம் இதுவரை எடுக்கப்படவில்லை. தனிப்பட்டோர் கூறும் கருத்துக்களை எமது கட்சியின் கருத்தாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.

எம்.ஏ.அமீனுல்லா

Wed, 02/06/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை