யாழ்ப்பாணத்தில் பெட்மின்டன் சுற்றுப்போட்டி இன்று ஆரம்பம்

East Eagle Smashers (UK) நிறுவனம் மற்றும் MSR நிறுவனம் ஆகியன யாழ் மாவட்ட பெட்மின்டன் மன்றத்துடன் இணைந்து இரண்டாவது வருடமாகவும் ஏற்பாடு செய்துள்ள யாழ் மாவட்ட விளையாட்டு வீரர்களுக்கான பெட்மின்டன் சுற்றுப் போட்டி இன்று 15 ஆம் திகதி ஆரம்பமாகி நாளையும் நாளை மறுதினமும் நடைபெறும்.

யாழ்ப்பாணம் அரியாலை சரஸ்வதி சனசமூக நிலைய உள்ளக விளையாட்டரங்கில் இந்தப் போட்டிகள் நடைபெறும். விழாவின் இறுதி நாளன்று நடைபெறும் பரிசளிப்பு விழாவில் யாழ்ப்பாண மாநகர முதல்வர் ஆர்னோல்ட் இமானுவேல் பிரதம அதிதியாக கலந்து கொள்கிறார் .

East Eagle Smashers (UK) தலைவர் கே. முரளி மற்றும் அந்நிறுவனத்தின் பிரதிநிதிகள் இந்த விழாவில் சிறப்பு அதிதிகளாக கலந்து சிறப்பிப்பர்.

இந்த பெட்மின்டன் சுற்றுப் போட்டியில் தமது திறமைகளை வெளிப்படுத்தும் 19 வயதுக்குட்பட்ட முதல் ஐந்து வீரர்களுக்கு அவர்களது திறமைகளை தேசிய மட்டத்திலும் சர்வதேச மட்டத்திலும் உயர்த்துவதற்காக அவர்களுக்கான முழுமையான பயிற்சிகளை வழங்குவதற்கு East Eagle Smashers (UK) நிறுவனத்தினர் முன் வந்துள்ளனர் இதற்காக அந்த தெரிவு செய்யப்படும் ஐந்து வீர ,வீராங்கனைகளுக்கு சகலவிதமான முழுமையான செலவுகளையும் இந்த நிறுவனத்தினர் பொறுப்பேற்க உள்ளமை குறிப்பிட்டார்.

Fri, 02/15/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை