சிரேஷ்ட ஊடகவியலாளரும் எழுத்தாளரும் கல்வியாளரும் அரசியல் செயற்பாட்டாளருமான ஜயதிலக டி சில்வா நேற்று (26) காலமானார். சிறிது காலம் நோய்வாய்பட்டிருந்த அவருக்கு இறக்கும்போது வயது 80. டெயிலி நியூஸ், சண்டே ஒப்சர்வர் பத்திரிகைகளின் பிரதம ஆசிரியராகவும் பணியாற்றிய அவர், 1938ஆம் ஆண்டு அம்பலாங்கொடையில் பிறந்தவராவார்.
90களின் பிற்பகுதியில் டெய்லி நியூசில் இணைந்துகொண்ட அவர், 2001இல் பிரதம ஆசிரியரானார். 2003ஆம் ஆண்டில் சண்டே ஒப்சர்வர் பத்திரிகையின் பிரதம ஆசிரியராகவும் நியமிக்கப்பட்டார்.
கொழும்பு பல்கலைக்கழகத்தின் பட்டதாரியான அவர், ஆசிரிய தொழிலில் தன்னை முதலில் ஈடுபடுத்திக்ெகாண்ட அவர், தெனியாய மத்திய கல்லூரியின் அதிபராகவிருந்து பின்னர் ஆசிரிய தொழிலைக் கைவிட்டு இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் மூலம் முழுநேர அரசியலில் ஈடுபட்டார். அன்னாரின் இறுதிக்கிரியை நாளை வியாழக்கிழமை (28) பிற்பகல் 3.30 இற்கு நாவலை பொது மயானத்தில் நடைபெறும்.
from tkn