கொழும்பில் நீர்வெட்டு

பராமரிப்பு வேலைகளை முன்னிட்டு கொழும்பின் பல பகுதிகளில் நாளை (01) காலை 8 மணி முதல் ஞாயிறு பிற்பகல் 3 மணிவரை நீர்விநியோகம் தடைப்படுமென, நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

கொழும்பு 13, கொழும்பு 14, கொழும்பு 15 ஆகிய பகுதிகளிலேயே நீர்விநியோகம் தடைப்படுமென்பதுடன், புறக்கோட்டை மற்றும் துறைமுகப் பகுதிகளில் குறைந்தளவான அமுக்கத்துடன் நீர் கிடைக்குமெனவும், அச்சபை அறிவித்துள்ளது.

Thu, 02/28/2019 - 11:26


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை