அக்கரைப்பற்று பிரதேச கரம் அணி மாகாண மட்டத்திற்கு தெரிவு

அம்பாறை மாவட்ட கரம் போட்டியியில் அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தைத் சேர்ந்த கரம் அணி மாகாண மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்ட பிரதேச செயலகங்களுக்கிடையில் நடாத்தப்பட்ட மாவட்ட கரம் போட்டியில் அக்கரைப்பற்று பிரதேச கரம் அணி இரண்டாவது முறையாகவும் சம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளது. ஒலுவில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கரம் போட்டியில் அக்கரைப்பற்றைச் சேர்ந்த எம்.எச்.ஜெய்னுடீன், ஐ.எல்.சரிப்டீன், எம்.எம்.முபீன், ஐ.எல்.சாஜித், எம்.ஏ.சுஹைப், என்.ரி.நழீம் ஆகிய போட்டியாளர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்று மாகாண மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 2018ஆம் ஆண்டு அம்பாரை மாவட்ட சம்பியன் பட்டத்தையும் அக்கரைப்பற்று பிரதேச செயலக கரம் அணி பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

(அக்கரைப்பற்று மத்திய நிருபர்)

Wed, 02/20/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை