கிழக்கு பல்கலைக்கழக உத்தியோகத்தர் விடுதிக்கு அடிக்கல் நடும் விழா

கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாக உத்தியோகத்தர்களுக்கு விடுதி அமைப்பதற்கான அடிக்கல் நடும் விழா இன்று (07) பேராசிரியர் வீ. கனகசிங்கம் தலைமையில் இடம்பெற்றது.

ரூ. 40மில்லியன் செலவில் எட்டு விடுதிகள் நிர்மாணிக்கப்பட உள்ளதாகவும் கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாக முதல்வர் பேராசிரியர் பி.கணகசிங்கம் தெரிவித்தார்.

இந்த அடிக்கல் நடும் நிகழ்வில் பீடாதிபதிகள், துணை தலைவர்கள்,விரிவுரையாளர்கள் எனபலர் கலந்து கொண்டனர்.

இவ்விடுதி அமையப் பெறும் இடத்திற்கு "கெம்பஸ் வில்லேஜ்" என பெயர் சூட்டப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

(ரொட்டவெவ குறூப் நிருபர் - அப்துல்சலாம் யாசீம்)

Fri, 02/08/2019 - 14:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை