மன்னார் நீதவானுக்கு மிரட்டல்; இருவருக்கு விளக்கமறியல்

மன்னார் நீதவானுக்கு கொலை மிரட்டல் விடுத்தார்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட மூதூர் பகுதியைச் சேர்ந்த இரு சந்தேக நபர்களை எதிர்வரும் 14நாட்களுக்கு விளக்கமறிலில் வைக்க மன்னார் நீதிமன்றம் நேற்று (26) செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது. 

திருகோணமலை பகுதியைச் சேர்ந்த இருவர் மன்னார் நீதவான் நீதிமன்றத்திற்கு நேற்று முந்தினம் திங்கட்கிழமை (25) வருகை தந்த நிலையில் மன்னார் நீதவான் நீதிமன்றத்தின் பதிவாளரிடம் சென்று தாம் திருகோணமலை மூதூர் நீதவான் நீதிமன்றத்தில் இருந்து வந்துள்ளதாக தெரிவித்ததோடு போலி ஆவணங்களை சமர்ப்பித்து தாம் மன்னார் நீதிபதியை சந்திக்க வந்துள்ளதாக கோரி மன்னார் நீதவான் ரீ.சரவணராஜாவின் மெய்ப்பாதுகாலருடன் உரையாடியுள்ளனர். 

இதன் போது குறித்த இரு நபர்களும் மன்னார் நீதவான் ரீ.சரவணராஜாவின் மெய்ப்பாதுகாவலருடன் கதைத்துள்ளதோடு, நீதவானுக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் உரையாடியுள்ளனர். 

குறிப்பாக குறித்த இரு சந்தேக நபர்களும் தமக்கும் நீதவானுக்கும் நட்பு ரீதியான உறவு உள்ளதாக கூறியுள்ளதோடு, நீதிச் சேவை ஆணைக் குழுவினால் ஏற்கனவே வழங்கப்பட்ட ஆவணங்களையும், அடையாள அட்டையையும் பயன்படுத்தி மன்னார் நீதிமன்றத்தின் பதிவாளரை தொடர்பு கொண்டதோடு, நீதவானின் மெய்ப்பாதுகாவலரை சந்தித்து உரையாடியதோடு நீதவானுக்கு உயிர் ஆபத்து ஏற்படும் வகையில் உரையாடியுள்ளதோடு, மன்னார் நீதிமன்றத்தில் இருந்து குறித்த இரு நபர்களும் வெளியேறியுள்ளனர். 

இந்த நிலையில் மன்னார் நீதிமன்ற பொலிஸார் மன்னார் பொலிஸாருக்கு தகவல் வழங்கிய நிலையில் மன்னார் பொலிஸார் குறித்த நபர்களை கைதுசெய்து நேற்று மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.   

(மன்னார் குறூப் நிருபர்)

Wed, 02/27/2019 - 11:47


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை