கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை ஜனாதிபதி நேரில் சென்று பார்வை

போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் விசேட அதிரடிப் படையினருக்கு ஜனாதிபதி வாழ்த்து

இலங்கையில் இதுவரையில் கைப்பற்றப்பட்டுள்ள போதைப்பொருட்களுடன் ஒப்பிடுகையில் பாரிய அளவிலான போதைப்பொருட்கள் நேற்று (23) இரவு கைப்பற்றிய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் விசேட அதிரடிப் படையினருக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

கொள்ளுப்பிட்டியில் கைப்பற்றிய 294.49kg ஹெரோயின் தொகையை, போதைப்பொருள் தடுப்பு பிரிவிற்கு சென்று பார்வையிட்ட ஜனாதிபதி, இவ்வாறு பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை எதிர்கால சந்ததியினருக்கு ஆற்றிய உன்னத பணி என்று தெரிவித்த ஜனாதிபதி, இவ்வகையான செயற்பாடுகளுக்கு தனது பூரண ஆசீர்வாதமும் ஒத்துழைப்பும் எப்போதும் உண்டு என்றும் மேலும் தெரிவித்தார்.

Sun, 02/24/2019 - 13:35


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை