நேபாளத்தில் இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில் அந்நாட்டுக் கலாசார, சுற்றுலா மற்றும் விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ரவிந்திர அதிஹாரி (Rabindra Adhikari) உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளதாக, சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கிழக்கு நேபாளத்தின் ஹிமாலயப் பிரதேசத்தில் நேற்று (27) இந்த விபத்துச் சம்பவித்துள்ளது.
சீரற்ற காலநிலையே இந்த விபத்துக்குக் காரணமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த ஹெலிகொப்டர் மலையுடன் மோதி விபத்துக்குள்ளானதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
கிழக்கு நேபாளத்தின் Terathum மாவட்டத்திலுள்ள விமானத் தளத்தைப் பார்வையிடுவதற்காக காத்மண்டுவிலிருந்து இக்குழுவினர் புறப்பட்டுச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Thu, 02/28/2019 - 12:00
from tkn