அகில இலங்கை சிறுவர் மெய்வல்லுனர் போட்டி: 7000 பாடசாலை மாணவர்கள் பங்கேற்பு

கல்வி அமைச்சும்,கல்வி அமைச்சின் சுகாதாரம்,உடற்கல்வி மற்றும் விளையாட்டுத்துறை பிரிவும்,நான்காவது தடவையாக ஏற்பாடு செய்துள்ள அகில இலங்கை பாடசாலைகள் சிறுவர் மெய்வல்லுநர் போட்டிகள் எதிர்வரும் மார்ச் மாதம் 9,10 மற்றும் 11ஆம் திகதிகளில் கண்டி போகம்பற மைதானத்தில் நடைபெறவுள்ளன.

தரம் 3,தரம் 4 மற்றும் தரம் 5 ஆகிய வகுப்புகளில் கல்விபயிலும் பாடசாலை மாணவர்களுக்கிடையில் விளையாட்டுத்துறை ஆர்வத்தை அதிகரிப்பது மற்றும் ஆரோக்கியமான வீரர்களை உருவாக்கும் நோக்கில் இந்தசிறுவர் மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் போட்டிகள் நெஸ்லே லங்கா நிறுவனத்தின் அனுசரணையுடன் நடைபெற்றுவருகின்றது.

அந்தவகையில் பாடசாலை இல்லவிளையாட்டுப் போட்டிகளைத் தொடர்ந்துஅகில இலங்கை ரீதியாக நடத்தப்பட்ட முன்னோட்டப் போட்டிகளில் சுமார் 2 இலட்சம் மாணவர்கள் பங்குபற்றியிருந்ததுடன், இதில் தகுதி பெற்ற ஐயாயிரத்து 184 மாணவர்கள் இலங்கை பாடசாலைகள் சிறுவர் மெய்வல்லுநர் போட்டிகளில் பங்குபெற தகுதியினைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

இதன்படி. இம்முறைபோட்டித் தொடரில் நாடாளாவிய ரீதியிலிருந்து தெரிவாகிய தரம் 3ஐச் சேர்ந்த 2,592மாணவர்களும்,தரம் 4ஐச் சேர்ந்த 2,592 மாணவர்களும்,தரம் 5ஐச் சேர்ந்த 2,592 மாணவர்களும் பங்குபற்றவுள்ளனர்.

உடற்தகுதி, தாங்கிக் கொள்ளும் சக்தி, நட்பு உள்ளிட்டவிடயங்களைமுன்னிலைப்படுத்திநடத்தப்படும் சிறுவர் மெய்வல்லுனர் போட்டிகளில் நடத்தல்,ஓடுதல்,சுழல்தல் மற்றும் எறிதல் ஆகியபோட்டிகள் விளையாட்டுக்கள் இடம்பெறவுள்ளதுடன், இப் போட்டிகள் தனிநபர் குழுக்கள் மற்றும் கலப்புபோட்டிகளாக இடம்பெறவுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

அதேநேரம், 2015இல் இந்த மெய்வல்லுநர் போட்டிகள் அறிமுகம் செய்யப்பட்டபோதுசுமார் 55 ஆயிரம் பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்டிருந்ததுடன்,கடந்தவருடம் நடைபெற்றபோட்டித் தொடரில் சுமார் 6 ஆயிரம் மாணவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

அத்துடன், 12 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு மெய்வல்லுனர் போட்டிகளில் பங்குபற்றுவதற்குவிதிக்கப்பட்டதடையைகல்விஅமைச்சுநீக்கியதைத் தொடர்ந்து இதுவரை 12 வயதுக்குட்பட்டபிரிவில் 7 போட்டிச் சாதனைகளும், 14 வயதுக்குட்பட்டபிரிவில் எட்டுபோட்டிச் சாதனைகளும் நிகழ்த்தப்பட்டுள்ளமை மற்று மொரு சிறப்பம்சமாகும்.

கடந்த வருடம் வலயமட்டப் போட்டிகளை நடத்த தவறியதால் அகில இலங்கை சிறுவர் மெய்வல்லுனர் போட்டித் தொடரில் பங்குபெறும் வாய்பபை தவறவிட்டஊவாமற்றும் வடமத்தியமாகாணங்களைச் சேர்ந்தமாணவர்கள் இம்முறை இறுதிப் போட்டியில் கலந்துகொள்ளவுள்ளனர்.

இது தொடர்பில் நெஸ்லே லங்கா நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த விசேட செய்தியாளர் சந்திப்புகடந்ததிங்கட்கிழமை (25) கொழும்பில் இடம்பெற்றது.

இதன்போதுஅகில இலங்கை சிறுவர் மெய்வல்லுநர் போட்டிகளில் சம்பியனுக்கு வழங்கப்படவுள்ள கிண்ணத்தை கல்வி அமைச்சின் விளையாட்டுத்துறை பிரதிப் பணிப்பாளர் அதுல விஜேவர்தன, கல்விஅமைச்சின் செயற்றிட்டஅதிகாரிமில்ரோய் ஜயமான்ன,கல்விஅமைச்சின் விளையாட்டுத்துறை விசேடஆலோசகர் சுனில் ஜயவீர ஆகியோரிடம் நெஸ்லே லங்கா நிறுவனத்தின் கூட்டாண்மை விடயங்களுக்கான உதவித் தலைவர் பந்துல எகொடகே கையளித்தார்.

(பீ.எப் மொஹமட்)

Thu, 02/28/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை