பிடியெடுப்பின்போது எம்புல்தெனியவுக்கு காயம்; 6 வார ஓய்வு

- சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்

இலங்கை கிரிக்கெட் அணியின் இடதுகை சுழற்பந்து வீச்சளார் லஸித் எம்புல்தெனியவுக்கு இடது கையில் காயம் ஏற்பட்டுள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

போர்ட் எலிசபெத் மைதானத்தில் இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையில் நேற்று (21) ஆரம்பமான டெஸ்ட் போட்டியின்போதே, இவரது இடதுகை கட்டை விரலில் காயம் ஏற்பட்டது.

பிடியெடுப்பொன்றை மேற்கொள்ள முயற்சி செய்த வேளையில், அவருக்கு இவ்வாறு காயம் ஏற்பட்டது.

அதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட X கதிர் சோதனையின்போது, அவருக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது

இதன் காரணமாக, அவருக்கு 6 வார காலத்துக்கு ஓய்வில் இருக்குமாறும் வைத்தியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.  

Fri, 02/22/2019 - 10:29


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை