உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியொன்றுடன் சந்தேகநபர் ஒருவர் கடற்படையினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்றைய தினம் (12) சேருநுவர, உப்புரல் பிரதேசத்தில் வைத்து, ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படையினர், சந்தேகத்திற்கிடமான நபரொருவரை சோதனையிட்டபோது அவரிடமிருந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்றும், 53 சிறிய சன்னங்களும், 47 தீப்பெட்டிகளும் மீட்கப்பட்டள்ளதாக கடற்படை பேச்சாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர், கைப்பற்றப்பட்ட ஆயுதங்களுடன் மேலதிக சட்ட நடவடிக்கை தொடர்பில் சேருநுவர பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
Wed, 02/13/2019 - 17:43
from tkn