3 கிலோ தங்க நகைகளுடன் ஏழு பேர் கைது

சிங்கப்பூர் மற்றும் துபாயிலிருந்து பெருந்தொகை தங்க நகைகளை சட்டவிரோதமாக கடத்தி வந்த ஒன்பது இலங்கையர்களை சுங்க அதிகாரிகள் கைது செய்தனர். கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்று (20) இவர்கள் கைதாகினர்.

யூ.எல் 303 மற்றும் ஈ.கே 654 ஆகிய விமானங்கள் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த இவர்களிடமிருந்து 2கிலோ973.67 கிராம் நிறை கொண்ட தங்க நகைகள் மீட்கப்பட்டதாகவும் இவையாவும் பூரணப்படுத்தப்படாத நகைகளென்றும் சுங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் சுனில் ஜயரட்ண தெரிவித்தார்.கைப்பற்றப்பட்டுள்ள மொத்த நகைகளின் பெறுமதி ஒருகோடியே 63 இலட்சத்து 44ஆயிரத்து 179 ரூபா என மதிப்பிடப் பட்டுள்ளது.

தங்கம் கடத்திய சந்தேக நபர்கள் மருதானை, நீர்கொழும்பு, சீதுவை, சிலாபம் மற்றும் கண்டி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களென்றும் சுங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.

இத் தங்க நகைகளை பறிமுதல் செய்துள்ள சுங்க அதிகாரிகள் இக்கடத்தல் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

லக்ஷ்மி பரசுராமன்

 

Thu, 02/21/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை