அமைச்சர் மங்களவின் அரசியல் வாழ்க்கை 30 வருட பூர்த்தி

கொழும்பில் நாளை வைபவம்

நிதியமைச்சர் மங்கள சமர வீரவின் அரசியல் வாழ்க்கை 30 வருடங்களைப் பூர்த்தி செய்துள்ளதை முன்னிட்டு நாளை 28ஆம் திகதி வியாழக்கிழமை 3 மணிக்கு கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் முக்கிய நிகழ்வொன்று நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வின்போது ஐக்கிய நாடுகள் அமைப்பின் முன்னாள் அமெரிக்க உயர்ஸ்தானிகர் சமந்தா பவர் பிரதான உரையை நிகழ்த்தவுள்ளார்.

மாத்தறை மாவட்டத்தில் சமூக, பொருளாதார அரசியல் மாற்றங்களை உருவாக்குவதில் மூன்று தசாப்தங்களாக அமைச்சர் மங்கள சமரவீர முக்கிய வகிபாகத்தைக் கொண்டுள்ளார். அவரது அரசியல் பயணத்தின் உறுதிமிக்க பணிகளை மெச்சும் வகையிலேயே இந்த முக்கிய வைபவத்தை ஏற்பாடு செய்திருப்பதாக ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது.

இந்த வைபத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் விசேட அதிதிகளாக கலந்து கொள்ளவுள்ளனர்.

Wed, 02/27/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை