21 வயது யுவதி குத்திக் கொலை; மற்றொருவர் காயம்

நொச்சியாகமவில் இனந்தெரியாதவரின் கத்திக்குத்துக்கு இலக்காகி 21 வயது யுவதி உயிரிழந்துள்ளதுடன், அவரது தாய் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இச்சம்பவம் நேற்றுமுன்தினம் (21) இரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது.  தாயும் மகளும் சைக்கிளில் செல்லும் வழியிலேயே அவர்களை இடைமறித்து கத்தியால் குத்திக் கொலை செய்ய முயற்சி முன்னெடுக்கப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இச்சம்பவம் தொடர்பில் காயமடைந்துள்ள தாயின் இரண்டாவது கணவர் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். உயிரிழந்துள்ள யுவதி, தாயின் முதற் கணவருக்கு பிறந்தவரென்றும் குடும்ப தகராறு காரணமாகவே இத்தாக்குதல் இடம்பெற்றிருப்பதாகவும் பொலிஸ் ஆரம்ப விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

(லக்ஷ்மி பரசுராமன்)

Sat, 02/23/2019 - 08:31


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை