அவுஸ்திரேலிய 15 வயதின் கீழ் கிரிக்கெட் அணியுடன் பலாங்கொடை ஜெயிலானி அணி மோதல்

தற்போது நாட்டுக்கு வருகை தந்துள்ள அவுஸ் திரேலியாவின் 15 வயதின் கீழ் கிரிக்கெட் அணியுடன் பலாங்கொடை இ/ஜெயிலானி தேசிய பாடசாலை கிரிக்கெட் அணி கிரிக்கெட் போட்டியொன்றில் போட்டியிடவுள்ளது.

நேற்று 21ஆம் திகதி இப்போட்டி கண்டி அஸ்கிரிய சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெற்றது. கல்வி அமைச்சு மற்றும் சிங்கர் நிறுவனத்தின் அனுசரணையுடன் நடை பெற்ற 15 வயதுக்கு கீழ் கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் அதிகூடிய புள்ளிகளை பெற்ற மூன்றாவது சிறந்த அணியாக பலாங்கொடை இ/ஜெயிலானி தேசிய பாடசாலை அணி திறமை கா ட்டியுள்ளது.

இப்போட்டிகளில் வெற்றி பெற்ற முதல் மூன்று அணிகளுக்கும் அவுஸ்திரேலிய 15 வயதின் கீழ் கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் பங்குபற்ற வாய்ப்பு கிடைத்துள்ளது.இப்போட்டியில் இப் பாடசாலை கிரிக்கெட் வீரர்கள் தொடர்ச்சியாக விளையாடிய அனைத்து போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி திறமை காட்டி வந்தமை குறிப் பிடத்தக்கதாகும்.

(இரத்தினபுரி சுழற்சி நிருபர்)

Fri, 02/22/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை