வாகரை பிரதேசத்திற்கு 13 இலட்சம் பெறுமதியான உதவி

வாகரை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பொது அமைப்புகளுக்கு பன்முக நிதி உதவிப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு செயலக கேட்போர் கூடத்தில் இன்று (15) நடைபெற்றது.

வாகரை பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.கங்காதரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் கலந்து கொண்டார்.

மேலும் அதிதிகளாக வாகரை பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.எஸ்.அமலினி, வாகரை பிரதேச சபை உறுப்பினர் எஸ்.அன்டன் மற்றும் பயனாளிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது பாராளுமன்ற உறுப்பினரின் 2018ம் ஆண்டுக்கான பன்முக நிதி ஒதுக்கீட்டின்ரூபாய் பதின்மூன்றரை இலட்சம்நிதியின்மூலம் வாகரைப் பிரதேசத்திலுள்ள கிராமமட்ட அமைப்புக்கள், ஆலயங்கள், அறநெறிப் பாடசாலைகள், விளையாட்டு கழகம் மற்றும் இளைஞர்கள் கழங்கங்களுக்கு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

(பாசிக்குடா நிருபர்– கே. அநுருத்தன்)

Fri, 02/15/2019 - 15:28


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை