லேக்ஹவுஸ் நிறுவன ஸ்தாபகர் டி. ஆர். விஜயவர்தனவின் 133வது பிறந்த தினத்தையொட்டிய மத அனுட்டானங்கள் இன்று இரவும் (21/02) நாளை 22ம் திகதியும் லேக்ஹவுஸ் நிறுவனத்தில் நடைபெறும்.
லேக்ஹவுஸ் நிறுவனத் தலைவரும் முகாமைத்துவ பணிப்பாளருமான கிருஷாந்த குரே தலைமையில் இந்நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. அதன்படி இன்று இரவு ஹுணுப்பிட்டிய கங்காராம விஹாரையின் விஹாராதிபதி தலைமையில் தர்ம உபதேசம் நடைபெறும். மறுநாள் 22ம் திகதி பகல் அன்னதான நிகழ்வுகளும் நடைபெறும். இந்நிகழ்வில் ஹுணுப்பிட்டிய கங்காராம விஹாரை, கோட்டை சம்புத்தாலோக்க மூன்று நிக்காயாக்களையும் சேர்ந்த தேரர்களும் கலந்துகொள்வார்கள்.
லேக்ஹவுஸ் நிறுவன பௌத்த சங்கம் இச்சமய நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளது. இலங்கை வானொலி தேசிய சேவையின் ஊடாக பிரித் ஓதல் இன்று இரவு (21) நேரலையில் ஒலிபரப்பப்படும்.
from tkn