ஆசிய கிண்ணத்தை வென்ற தேசிய வலைப்பந்து வீராங்கனைகள் 12 பேருக்கு வீடுகள் அன்பளிப்பு

தேசிய மற்றும் சர்வதேச மட்டப் போட்டிகளில் வலைப் பந்துவிளை யாட்டில் கிண்ணங்களை வென்ற தேசிய வலைப்பந்து அணியினர் 12 பேருக்கும் தலா 3 மில்லியன் பெறுமதியுள்ள வீட்டினை வீடமைப்பு,நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாச வழங்கி வைத்தார்.

2018 ஆம் ஆண்டு ஆசியவலைப் பந்து விளையாட்டில் தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் ஆசியக் கிண்ணத்தை இவ்வணிகைப்பற்றியது.

அத்துடன் அத்துருகிரிய,ஒருவல பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டபோர் கலைவிற்பன்னர் ஆரச்சிகேநொசெல் அஜந்த பெரேராவுக்கும் போர் விளையாட்டில் சர்வதேச ரீதியில் வெற்றியடைந்ததற்காகவும் இவருக்கும் வீடு அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

அத்துடன் எதிர்வரும் மே மாதம் சம்பியாவில் நடைபெறவுள்ள வலைப்பந்து விளையாட்டில் பங்குபற்றவுள்ள 18 பேருக்கும் அதாவது இலங்கை வலைப்பந்தாட்ட அணியினருக்குரிய விமான பயணச் சீட்டுக்கான 42 இலட்சம் ரூபாவை தனது தனிப்பட்ட நன்கொடையாளிகளின் மூலம் பெற்றுத் தருவதாகவும் அமைச்சர் சஜித் பிரேமதாச வாக்குறுதியளித்துள்ளார்கள்.

மென்மேலும் இந்த வீராங்கனைகள் வலைப்பந்தாட்டத்தில் வெற்றியடைவதற்கு இவர்கள் ஒவ்வொருவருக்கும் மொரட்டுவை,அங்குலானையில் 'சயுருபுர'வீடமைப்புத் திட்டத்தில் சுமார் 3 மில்லியன் ரூபா மதிப்புள்ள வீட்டினை அமைச்சர் சஜித் பிரேமதாச வழங்கிவைத்தார்.

நிகழ்வில் அமைச்சரின் மனைவி ஜலனி பிரேமதாச,வீடமைப்பு,நிர்மாணத்துறை மற்றும் கலாசாரஅலுவல்கள் அமைச்சின் செயலாளர் பேர்னாட் வசந்த மற்றும் நகரகுடியிருப்பு அபிவிருத்திஅதிகார சபையின் தலைவர் ரஞ்சித் சாந்தகஹவல, பலரும் கலந்துகொண்டார்கள்.

Thu, 02/14/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை