ரூ. 1,000 சம்பள அதிகரிப்பை வலியுறுத்தி தோட்டங்களில் கையெழுத்துவேட்டை

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை 1,000 ரூபாவாக அதிகரிக்க கோரியும் தங்களது அடிப்படை பிரச்சினைகளைத் தீர்க்குமாறும் மலையக இளைஞர்கள் அமைப்பு கையெழுத்து வேட்டையை ஆரம்பித்துள்ளது. டிக்கோயா இன்வெரி தோட்டத்தில் நேற்று (12) இந்த கையெழுத்து வேட்டை ஆரம்பமானது. இதையடுத்து மலையகத்தின் அனைத்துப் பிரதான நகரங்கள்,தோட்டங்களிலும் கையெழுத்து வேட்டைகள் முன்னெடுக்கப் பட்டுள்ளன.

இதேவேளை, மகஜர் ஒன்றைத் தயாரிப்பதுடன் சேகரிக்கப்படும் கையெழுத்துக்களையும் இணைத்து ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர், இந்திய உயர்ஸ்தானிகர், பிரிட்டன் உயர்ஸ்தானிகர் உட்பட பல முக்கியஸ்தர் களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஹற்றன் சுழற்சி நிருபர்

Wed, 02/13/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை