ஜம்பட்டா வீதியில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் காயம்

இன்று(01) நண்பகல் அளவில் கொழும்பு ஜம்பட்டா வீதி, செல்வி வத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் வீதியால் சென்றுகொண்டிருந்த 37 வயதான நபர் ஒருவர் காயமடைந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவரால் குறித்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார். காயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு கொழும்பு கரையோர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Tue, 01/01/2019 - 13:38


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை