'வடக்குக்கான நுழைவாயில்' மாபெரும் வர்த்தக கண்சாட்சி

வடக்கிற்கான நுழைவாயில் என்ற கருப்பொருளில் மாபெரும் நுகர்வோர் வர்த்தக கண்காட்சி 10வது தடவையாக நேற்று (25) யாழில் ஆரம்பமாகியது. கண்காட்சிக் கூடத்தை யாழ்.மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட் ஆரம்பித்து வைத்தார். கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு, யாழ். வர்த்தக கைத்தொழில் சம்மேளனம், இலங்கை மாநாட்டு அலுவலகம் மற்றும் சர்வதேச வர்த்தக மன்றம்,யாழ். மாநகரசபை மற்றும் யாழ். இந்திய தூதுவராலயம் ஆகியன இணைந்து இந்த வர்த்தக சந்தையினை பத்தாவது ஆண்டாக ஏற்பாடு செய்துள்ளன.

இக்கண்காட்சியானது மூன்று நாட்கள் இடம்பெற உள்ளது.

சுமார் 350க்கு மேற்பட்ட கண்காட்சி கூடங்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன. உள்ளூர் மற்றும் சர்வதேச உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களின் காட்சிக்கூடங்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன.

யாழ்.விசேட, யாழ்ப்பாணம் குறூப் நிருபர்கள

Sat, 01/26/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை