சாய்ந்தமருது ஸஹிரியன் விளையாட்டு கழகத்தால் வீரர்கள் கௌரவிப்பு

சாய்ந்தமருது ஸஹிரியன் விளையாட்டுக் கழகத்தின் 19வது வருடப் பூர்த்தி, புதிய ஆண்டுக்கான நிர்வாகத் தெரிவு மற்றும் கழக நிர்வாகம் உள்ளிட்ட வீரர்கள் கௌரவிப்பு நிகழ்வு வெள்ளிக்கிழமை (18) மாளிகைக்காடு பிஸ்மில்லாஹ் ஹோட்டலில் இடம்பெற்றது.

ஸஹிரியன் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் எம்.எச்.ஜிப்ரி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு கல்முனைத் தொகுதி ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளர் சட்டத்தரணி எம்.எஸ்.அப்துல் றஸ்ஸாக் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பதில் உடற்கல்விப் பணிப்பாளர் ஐ.எம்.கடாபி, முன்னாள் சம்மாந்துறை இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.அஸ்ஸாம் உள்ளிட்ட விளையாட்டு ஆர்வலர்கள், வீரர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

கடந்த 19 வருட காலமாக கழகத்தை சிறப்பான முறையில் வழிநடாத்திய கழக நிர்வாகத்தினர்கள் அதிதிகளினால் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

கழகத்தின் சார்பில் சுற்றுப் போட்டிகளிலும், சிநேகபூர்வ போட்டிகளிலும் திறமைகளை வெளிப்படுத்திய வீரர்கள் அதிதிகளினால் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து 2019ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகத் தெரிவு இடம்பெற்றது.

இதில் கழகத்தின் தலைவராக எஸ்.எச்.ஜிப்ரி மீண்டும் தெரிவு செய்யப்பட்டார். செயலாளராக எம்.எச்.ஏ.காலிதீன், தவிசாளராக எம்.எஸ்.ஏ.றசூல், உதவிச் செயலாளராக ஏ.சிப்னாஸ், பொருளாளராக எம்.எச்.நாஸர், உதவிப் பொருளாளராக ஏ.எம்.எம்.சிறாஜ், கழக முகாமையாளராக எம்.எச்.எம்.பிரிம்சாத், கழக தெரிவுக் குழுத் தலைவராக றியாத் ஏ.மஜீத், கழக பயிற்சியாளராக ஏ.எம்.ஏ.அஹத், எம்.எம்.எம்.றியாஸ், அணித் தலைவராக ரீ.நாஸர், அணியின் உதவித் தலைவராக எம்.பாயிஸ் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

நிகழ்வில் கலந்து கொண்ட அதிதிகளும் கழக நிர்வாகத்தினரால் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

சாய்ந்தமருது தினகரன் நிருபர்

Tue, 01/29/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை