வடமராட்சி, பருத்தித்துறை, கற்கோவளம் பகுதியில் இளைஞன் ஒருவர் அடிகாயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நேற்றிரவு (13) ஞாயிற்றுக்கிழமை இப்பகுதியில் நண்பர்களுடன் உரையடிக்கொண்டிருந்த வேளை தொலைபேசி ஒன்று வந்தாகவும் அதனை பேசியவாறு சிறிது தூரம் சென்ற குறிந்த இளைஞர் மீது இனம்தெரியாத மூன்று நபர்கள் கூரிய ஆயுதங்களினால் தாக்கிவிட்டு தப்பி சென்றுள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் வாசுதேவன் அமல்கரன் (22) எனும் இளைஞர் ஆவார்.
தாக்குதலை அடுத்து இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் தற்போது சடலம் பிரேத பரிசோதனைக்காக மந்திகை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(புங்குடுதீவு குறுப் நிருபர் - பாறுக் ஷிஹான்)
Mon, 01/14/2019 - 10:03
from tkn