அமெரிக்காவில் வங்கியில் துப்பாக்கிச் சூடு: ஐவர் பலி

அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாநிலத்தில் வங்கியில் மாணவன் ஒருவன் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் உயிரிழந்தனர்.

செப்ரிங் நகரில் உள்ள இந்த வங்கிக்குள் கடந்த புதன்கிழமை புகுந்த 21 வயது இளைஞர் ஒருவர், திடீரென தன்னிடம் இருந்த துப்பாக்கியால் அங்கு நின்றவர்கள் மீது சரமாரியாகச் சுடடுள்ளார்.

இந்த எதிர்பாராத தாக்குதலில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலர் தரையில் படுத்து தப்பினர். உயிரிழந்தவர்கள் யார் என்பது உடனடியாக தெரியவில்லை. இதையடுத்து பொலிஸார் அங்கு குவிந்தனர்.

துப்பாக்கிச்சூடு நடத்தியவர், பின்னர் பொலிஸாரிடம் சரணடைந்தார்.

இதுபோன்ற துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அமெரிக்காவில் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. கடந்த 2017 ஆம் ஆண்டு மட்டும் இதனால் 40 ஆயிரம் பேர் பலியாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

Fri, 01/25/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை