கோமாவில் இருந்த பெண்; குழந்தை பெற்ற விவகாரத்தில் தாதி கைது

அமெரிக்காவின் அரிஸோனா மாநிலத்தில் கோமாவில் இருந்த பெண் ஒருவர் குழந்தை பெற்ற சம்பவத்தில் ஆண் தாதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட அந்தப் பெண் சுமார் பத்து ஆண்டுகளாக நலிந்து, நினைவிழந்த நிலையில் பராமரிப்பு நிலையத்தில் இருந்து வருகிறார். கடந்த மாதம் அவர் ஓர் ஆண் குழந்தையைப் பெற்றார். அதற்குக் காரணமான சந்தேக நபர், சதர்லேண்டைச் சேர்ந்த நேதன் என்று பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

நேதன் அந்தப் பராமரிப்பு நிலையத்தில் உரிமம் பெற்ற தாதியாக வேலை செய்தவர். அவர் மீது பாலியல் அத்துமீறல், பெரியவர்களை துன்புறுத்தியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் தற்போது அந்தக் குழந்தையைப் பராமரித்து வருகின்றனர். இந்நிலையில் குழந்தையின் டி.என்.ஏ 36 வயதான நேதனுடன் ஒத்துப்போயுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணை துஷ்பிரயோகம் செய்ததை நேதன் ஒப்புக்கொண்டுள்ளார். நேதன் ஏனைய நோயாளிகள் மீது மேற்கொண்ட அத்துமீறல்கள் குறித்து விசாரணை நடத்தப்படுவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Fri, 01/25/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை