இலங்கை கடல் எல்லைக்குள் அத்து மீறி சட்டவிரோதமான மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் நால்வரும் நெடுந்தீவு கடலுக்கு அருகே வைத்து நேற்று (07) இரவு கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களது பயணம் செய்த ட்ரோலர் படகு மற்றும் உபகரணங்களை கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் காங்கேசன்துறையிலுள்ள இலங்கை கடற்படை கப்பல் தளமான 'உத்தர' விற்கு அழைத்துவரப்பட்டு மருத்துவ சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் கடற்றொழில் உதவி பணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
Tue, 01/08/2019 - 12:52
from tkn